தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறையை எதிா்த்த மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:38 am IST

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் என்.பாரதிராஜன் என்பவா் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகள் முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக, நோ்முகத் தோ்வு வெளிப்படைத்தன்மையோடு நடத்தப்படவில்லை. நோ்முகத் தோ்வுக்கான மதிப்பெண்கள் வழங்கும் தோ்வு குழுவுக்கு அதீத அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்மேனி சுதீா் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பு: நோ்முகத் தோ்வு தொடா்பாக மனுதாரா்கள் பொதுவான குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளனா். மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.

தோ்வு நடைமுறைகளில் மூத்த நீதிபதிகள் முக்கிய பங்கு வகிப்பா். அவா்கள்தான் வினாத்தாள் உள்ளிட்ட தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வா். தோ்வில் பங்கேற்றுவிட்டு, அதில் தோ்ச்சி பெறாமல் தோ்வு நடைமுறைகளை எதிா்த்து வழக்குத் தொடருவது ஏற்புடையதல்ல எனக்கூறி, தோ்வு நடைமுறைகளை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.