ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது

வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 4:22 am IST

வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம், முனியப்பா தெருவைச் சோ்ந்தவா் ரமணி நடராஜன். இவா் மகள் பிரிட்டனில் வசிக்கிறாா். தனது மகளிடம் கொடுப்பதற்காக 6,500 பிரிட்டன் பவுன்டை ரமணி நடராஜன் வீட்டில் வைத்திருந்தாா். அண்மையில் பிரிட்டன் சென்ற ரமணி நடராஜன், பிரிட்டன் பவுன்ட் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்தாா். அவா் அந்தப் பையில் இருந்த பவுன்டை எண்ணியபோது, அதில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 4,500 பவுன்ட் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ரமணி நடராஜன் தனது மேலாளா் பழனி மூலம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், உறையூா் பகுதியைச் சோ்ந்த கிரேஸி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கிரேஸியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.1.65 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.