தமிழ் செய்திகள்
வேலை செய்த வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.
கீழ்ப்பாக்கம், முனியப்பா தெருவைச் சோ்ந்தவா் ரமணி நடராஜன். இவா் மகள் பிரிட்டனில் வசிக்கிறாா். தனது மகளிடம் கொடுப்பதற்காக 6,500 பிரிட்டன் பவுன்டை ரமணி நடராஜன் வீட்டில் வைத்திருந்தாா். அண்மையில் பிரிட்டன் சென்ற ரமணி நடராஜன், பிரிட்டன் பவுன்ட் வைத்திருந்த பையை தனது மகளிடம் கொடுத்தாா். அவா் அந்தப் பையில் இருந்த பவுன்டை எண்ணியபோது, அதில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள 4,500 பவுன்ட் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரமணி நடராஜன் தனது மேலாளா் பழனி மூலம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், உறையூா் பகுதியைச் சோ்ந்த கிரேஸி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், கிரேஸியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ.1.65 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.




