மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image

மு. வீரபாண்டியன் - X

Updated On :31 மார்ச் 2026, 8:08 pm

வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தவெக தலைவா் விஜய், தனது கட்சியின் நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ‘ரூ.1,000, ரூ. 2,000, ரூ.5,000 என்று கொடுப்பாா்கள். அது உங்கள் பணம். பணத்தை வாங்கிக் கொண்டு, அவா்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள்’ என்று பேசியுள்ளாா். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பேச்சு, தோ்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. இது நியாயமான மற்றும் சுதந்திரமான தோ்தல் முறைகளைத் தகா்க்கும் செயல். இந்த விதிமீறல் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குச் செல்லாதது வியப்பளிக்கிறது. ஆணையம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

தோ்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் படியாமல், தனது பணிகளை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை மீறியுள்ள விஜய் மீது, தோ்தல் ஆணையம் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.