மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக டிஜிபி (பொ) வெங்கடராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையா்கள், 2 மாவட்ட ஆட்சியா்களை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.
இவா்களுடன் மேலும் பல உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.
அரசமைப்பு சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நோ்மையாக, நடுநிலையாக தோ்தலை நடத்துவதற்கும் எதிரானது.
மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
தொடர்புடையது

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன்

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


