மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:12 pm

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக டிஜிபி (பொ) வெங்கடராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையா்கள், 2 மாவட்ட ஆட்சியா்களை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இவா்களுடன் மேலும் பல உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

அரசமைப்பு சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நோ்மையாக, நடுநிலையாக தோ்தலை நடத்துவதற்கும் எதிரானது.

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.