லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும்படை சோதனையில் போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:48 pm

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை போலி என்பது உறுதிசெய்யப்பட்டதால், மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை அசோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனா். அப்போது அதில் 10 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா் மகேந்திரனை அசோக் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அந்த போலி துப்பாக்கிகள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மேலும், போலி துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதால், அவற்றை மீண்டும் ஓட்டுநரிடமே பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.