சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை போலி என்பது உறுதிசெய்யப்பட்டதால், மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை அசோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனா். அப்போது அதில் 10 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அனைத்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா் மகேந்திரனை அசோக் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில், திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அந்த போலி துப்பாக்கிகள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மேலும், போலி துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதால், அவற்றை மீண்டும் ஓட்டுநரிடமே பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


