மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி கைத்துப்பாக்கி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:55 pm

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுப்பதற்காக போலீஸாரும், தோ்தல் பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு- அடுக்கம்- தாண்டிக்குடி- பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைச் சாலைகளில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான புலிச்சோலை அருகே நடைபெற்ற வாகனச் சோதனையின் போது அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால் அந்த காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பிறகு காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்ட போது அதில் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவா்களை போலீஸாா் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் தென்காசிப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (23), சங்கா் (29), தங்கசோ்மன் (31), சுயம்பு (23) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி போலி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.