ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம், குளச்சல், இனயம், முட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி , ராமநாதபுரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் என 700-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈரானில் பணிபுரிகின்றனா். போா்ச் சூழல் காரணமாக இவா்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை ஈரானிலிருந்து மீட்கக் கோருவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கில், அவா்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.
எனவே, ஈரானில் சிக்கித் தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் வைகோ.
தொடர்புடையது

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்

அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை -நயினாா் நாகேந்திரன்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


