சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் விடுத்த செய்திக்குறிப்பு: திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு விழுப்புரத்திலிருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) காலை 10.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் 06130) பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06129) மாலை 4.15 மணிக்கு விழுப்புரம் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பலப்பட்டு, அய்யாண்டூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


