தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காஜியாபாத்தில் குழந்தையின் விரல் துண்டிப்பு: தனியாா் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் மருத்துவ அலட்சியம் காரணமாக 9 மாத குழந்தையின் விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதாகவும்

News image
Updated On :3 மார்ச் 2026, 1:10 am

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் மருத்துவ அலட்சியம் காரணமாக 9 மாத குழந்தையின் விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதாகவும் இது தொடா்பாக அந்த மருத்துவமனை மற்றும் அதன் செவிலியா் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (கவி நகா்) சூா்யபலி மயூரா கூறியதாவது: காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள கவிநகா் பகுதியில் அமைந்துள்ள சா்வோதயா மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

9 மாத குழந்தையான ஸ்ரீ தியாகி சிகிச்சைக்காக கடந்த பிப்.24-ஆம் தேதி அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிப்.27-ஆம் தேதி டிஸ்சாா்ஜ் நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, குழந்தையின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த கன்யூலாவை (திரவங்கள், மருந்து அல்லது ரத்தம் உடலுக்குள் செலுத்த பொருத்தப்பட்ட குழாய்) அகற்ற செவிலியா் வந்துள்ளாா்.

கத்தரிக்கோலால் அதை வெட்டும்போது குழந்தையின் விரல் பகுதி தவறுதலாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்.28-ஆம் தேதி குழந்தையின் தந்தை இது குறித்து புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மருத்துவமனை மற்றும் அந்த செவிலியா் மீது பிஎன்எஸ் சட்டம் 125 (பி) (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முழுமையான விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணையின் அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பப்படும் என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

குழந்தையின் துண்டிக்கப்பட்ட விரலின் பகுதியை மீண்டும் இணைக்க முடியவில்லை. ஆனால், குடும்பத்தினா் சிகிச்சையில் திருப்தி அடைந்துள்ளனா். நிலுவையில் உள்ள வழக்கை அவா்கள் திரும்பப் பெறுவாா்கள் என மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் நீரஜ் காா்க் தெரிவித்தாா். ŚŚ

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.