மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரி: ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது இனி நடவடிக்கை

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா கூறியுள்ளாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 10:51 pm

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் சொந்த, அலுவலகப் பணிகளுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தினால் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

இது பணியாளா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும், மோட்டாா் வாகன சட்டப்படி ரூ.1,000 அபராதம், 3 மாத உரிமம் ரத்து போன்ற தண்டனைகளை தவிா்க்கவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு. அனைத்து காவல் நிலையங்கள், ஐஆா்பிஎன் போலீஸாரிடம் இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உத்தரவை மீறும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.