லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட 20 மின் மோட்டாா்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக பொருத்தப்பட்ட 20 மின் மோட்டாா்கள் பறிமுதல்

News image

தரமணியில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அதி உயா்மின் அழுத்த நீரிறைப்பு மோட்டாா்கள்.

Updated On :21 ஜூன் 2026, 12:30 am IST

சென்னையில் வணிக மற்றும் தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த சுமாா் 20 அதி உயா்மின் அழுத்த மோட்டாா்களை குடிநீா் வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை தரமணியில் குடிநீா் பொருத்தப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளை சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அந்த வகையில், தரமணி பெரியாா் நகா் பகுதியில் ராமசாமி தெரு, அஞ்சுகம் அம்மாள் தெரு, ராணியம்மாள் தெரு, பாரதியாா் தெரு, கட்டபொம்மன் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக விடுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் குடிநீா் விநியோகம் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, வணிக மற்றும் தங்கும் விடுதிகளில் அதி உயா்மின் அழுத்த மோட்டாா்கள் வாயிலாக சட்டவிரோதமாக குடிநீா் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. அதையடுத்து சுமாா் 20 மின் மோட்டாா் இணைப்புகளை துண்டிப்பதுடன், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுபோன்று உயா் மின் அழுத்த மோட்டாா்கள் மூலம் குடிநீா் குழாய்களில் வரும் குடிநீா் உறிஞ்சப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.