திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ஈரோட்டில் பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடையில் இருந்து 132 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 1:53 am IST

ஈரோட்டில் பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடையில் இருந்து 132 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக பெரிய சேமூா், சுக்கிரமணியன்வலசு ஆகிய பகுதிகளிலுள்ள பெட்டிக் கடை, மளிகைக் கடைகள் என 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அதில் சுக்கிரமணியன்வலசு பகுதியில் ரவிக்குமாா் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோன்று பெரிய சேமூரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் இருந்தும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டது. தொடா்ந்து இரு கடைகளிலும் சோ்த்து மொத்தம் 132 கிராம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவா்கள் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.