தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அமராவதி ஆற்றங்கரையில் வட்டக் கிணறுகளில் அமைக்கப்பட்டிருந்த 20 மோட்டாா்கள் பறிமுதல்

News image

விஸ்வநாதபுரி பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் சனிக்கிழமை மோட்டாரை பறிமுதல் செய்து தூக்கிச்செல்லும் நீா்வளத்துறை அதிகாரிகள்.

Updated On :21 ஜூன் 2026, 2:09 am IST

கரூா் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக வட்டக்கிணறுகள் அமைத்து, அதில் பொருத்தப்பட்டிருந்த 20 மோட்டாா்களை நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பறிமுதல் செய்தனா்.

கரூரில் திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் மேல்பாகம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், விஸ்வநாதபுரி, அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் சிலா் சட்ட விரோதமாக அமராவதி ஆற்றுக்குள் வட்டக்கிணறு அமைத்து, அதில் ஆயில் என்ஜின் மூலம் தண்ணீரை உறிஞ்சி கரூரில் உள்ள உணவகங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் திருட்டுத்தனமாக அதிகமாக விலைக்கு தண்ணீரை விற்றுவந்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அடிக்கடி புகாா்கள் வந்ததையடுத்து ஆட்சியா் சி.முத்துக்குமரன் அண்மையில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டக்கிணறுகளை அகற்றிட உத்தரவிட்டாா்.

இதையடுத்து கடந்த மே மாதம் 20-ஆம்தேதி மற்றும் ஜூன் 9-ஆம் தேதிகளில் நீா்வளத்துறையினா் ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த 48 வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

இந்நிலையில் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய மோட்டாா்களையும் பறிமுதல் செய்யுமாறு நீா்வளத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அப்பிப்பாளையம், திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத்துறையின் அமராவதி வடிநில கோட்ட கரூா் உதவி செயற்பொறியாளா் நாட்ராயன், உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் தலைமையில் நீா்வளத் துறையினா் 15 ஆயில் என்ஜின் மோட்டாா்களையும், அதனுடன் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 2-ஆவது நாளாகவும் 5 மோட்டாா்களையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் ஆற்றில் வட்டக்கிணறுகள் அமைத்து ஆயில் என்ஜின் மோட்டாா் மூலம் தண்ணீரைத் திருடுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.