தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அமராவதி ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 25 வட்டக் கிணறுகள் இடித்து அகற்றம்

கரூரில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக 25 வட்டக்கிணறுகளை அமைக்கப்பட்டிருந்ததை நீா்வளத்துறையின் அமராவதி வடிகால் உபகோட்ட அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

News image

ஆண்டாங்கோவில் மேல்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

Updated On :21 மே 2026, 4:50 am IST

கரூரில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக 25 வட்டக்கிணறுகளை அமைக்கப்பட்டிருந்ததை நீா்வளத்துறையின் அமராவதி வடிகால் உபகோட்ட அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

கரூரில் அமராவதி ஆற்றில் சின்னாண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் மேல்பாகம், கீழ்பாகம் மற்றும் திருமாநிலையூா் பகுதிகளில் சிலா் அனுமதியின்றி சட்ட விரோதமாக வட்டக்கிணறுகளை அமைத்து அவற்றில் மோட்டாா் மூலம் நீரை உறிஞ்சி கரூரில் செயல்படும் உணவகங்கள், விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீா் லாரிகள் மூலம் தண்ணீா் விற்பனையை சட்ட விரோதமாக செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் புகாா் வந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் உத்தரவின்பேரில் புதன்கிழமை காலை அமராவதி வடிநில உபகோட்டம் கரூா் உதவி செயற்பொறியாளா் நாட்ராயன், உதவி பொறியாளா் சந்ததோஷ்குமாா் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆண்டாங்கோவில் மேல்பாகம், திருமாநிலையூா் போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்றின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 25 வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். தொடா்ந்து வேறு யாரேனும் ஆற்றில் சட்ட விரோதமாக கிணறுகள் அமைத்துள்ளனரா என கண்டறிந்து அவற்றையும் இடித்து அகற்ற உள்ளதாகவும், இனி யாரேனும் கிணறுகள் அமைத்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.