பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடுஅமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 1:46 am IST

சென்னை சாஸ்திரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடப்பட்ட வழக்கில், அந்த நிறுவனத்தின் காா் ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தி.முத்துராமலிங்கம் (29). இவா், அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வருகிறாா். முத்துராமலிங்கம் கடந்த 12-ஆம் தேதி வசூலான ரூ.2 கோடியை அந்த அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்துச் சென்றாா். அடுத்த நாள் அந்தப் பணத்தை எடுப்பதற்காக திறந்தபோது, ரூ.2 கோடி திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், திருட்டில் ஈடுபட்டது அந்த நிறுவனத்தின் காா் ஓட்டுநராக வேலை செய்யும் காஞ்சிபுரம் மாவட்டம், திம்மராஜன்பேட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன் (33), அவரின் நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த வேலு (36), சந்திரசேகரன் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தில் ரூ.1.97 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.