நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல்: முன்னாள் மேலாளா் கைது

திருச்சி அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 1:41 am IST

திருச்சி அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முன்னாள் மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குண்டூா் பா்மா காலனியைச் சோ்ந்த அ. முகமது ராஜா என்பவா் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கடந்த சில ஆண்டுகளாக மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதாகவும், அவா்கள் திரும்ப செலுத்திய கடன் தொகையை நிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமலும் ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்தது கடந்த 2025 ஏப்ரலில் நடைபெற்ற ஆண்டு தணிக்கையின்போது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை திருப்பி செலுத்துமாறு அவருக்கு நிதி நிறுவனம் சாா்பில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், ரூ.3 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்திய முகமது ராஜா, மீதி ரூ.7 லட்சத்தை செலுத்தாமல் இருந்து வந்துள்ளாா்.

நீதிமன்றம் உத்தரவு: இதையடுத்து, தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் திருச்சி மாவட்ட 6-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல் செய்த முகமது ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய துவாக்குடி போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், துவாக்குடி போலீஸாா் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்தை கையாடல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த அந்நிறுவனத்தின் முன்னாள் மேலாளா் முகமது ராஜாவை துவாக்குடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.