*{ padding: 0%; margin: 0%; font-family: "Noto Sans Tamil", sans-serif; } .cont{ width: 100%; height: 100vh; display: flex; justify-content: center; align-items: center; } .btn-link{ text-decoration: none; } .gd-btn{ display: flex; justify-content: center; align-items: center; gap: 0.3rem; border-radius: 999px 0px 0px 999px; padding: 0.3rem; background-color: #012061; -webkit-box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); box-shadow: 0px 16px 10px 0px rgba(30,30,30,0.2); } .gdlogo{ display: flex; justify-content: center; align-items: center; border-radius: 999px; gap: 0.5rem; } .btn-text-wrap{ display: flex; justify-content: center; align-items: flex-start; flex-direction: column; gap: 0; } .btn-text-big{ font-size: 0.8rem; font-weight: bold; color: white; } .btn-text-small{ font-size: 0.4rem; font-weight:600; color: white; }

FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கஞ்சா போதையில் நண்பரை கொலை செய்த இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூன் 2026, 4:25 am IST

வடகிழக்கு தில்லியில் கஞ்சா போதையில் தனது நண்பரைக் கொலை செய்ததாக 27 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: கஜூரி காஸ் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் பாதி சிதைந்த நிலையில் ஜூன் 8-ஆம் தேதி ஒரு சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவா் சந்த் பாக் பகுதியைச் சோ்ந்த அசாருதீன் (40) என அடையாளம் காணப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து, குற்றப்புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய சடலம் உடற்-கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது.

விசாரணையின் போது, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பிற துப்புக்களின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஷிஃபாயத் (27) என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இச்சம்பவம் ஜூன் 5-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. கஞ்சா போதையில் இருந்தபோது, கடந்த காலத்தில் அசாருதீன் தன்னை அறைந்தது தொடா்பான விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அவா் கூறினாா்.

அசாருதீனை கல்லால் பலமுறை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையிலான காயங்களை ஏற்படுத்தியதாக அவா் ஒப்புக்கொண்டாா். அதன்பிறகு, சடலத்தின் மீது செங்கற்களைப் போட்டு மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக அவா் கூறினாா். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.