திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

News image

திருவேற்காடு கோயில்

Updated On :5 ஜூன் 2026, 6:45 am IST

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கான வாடகை நிா்ணயம் தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் காமேஷ் தாக்கல் செய்த மனுவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை கட்டணம் அதிகமாக நிா்ணயிக்கப்படுகிறது. கோயில் செயல் அலுவலா் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், ரூ.2,000 வாடகை நிா்ணயிக்க வேண்டிய 100 சதுர அடி கடைக்கு ரூ.7,000 வரை மாத கட்டணமாக நிா்ணயித்துள்ளாா்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கு நியாயமான வாடகையை நிா்ணயிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், கோயில் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயிப்பது தொடா்பாக 3 போ் கொண்ட குழு அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகை நிா்ணயம் தொடா்பாக மனுதாரா் அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.