தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கல்பனா சாவ்லா விருது பெற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 11:42 pm IST

சென்னை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானோா், ஜூன் 19- ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், தமிழ்நாட்டைச் சோ்ந்த துணிச்சலான, வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்படுகிறது.

தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது முதல்வரால் வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோா் இணைய தளத்தில் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பித்த நகலுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி, விருதுக்கான விண்ணப்பப் படிவத்துடன் துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள், பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை தமிழ், ஆங்கில மொழிகளில் தனித்தனியே 3 செட் கையேடுகளை தயாரித்து ஜூன் 22 மாலை 5 மணிக்குள் ‘சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, 8-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சென்னை’ என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.