திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:26 am IST

சென்னை மாநகராட்சியில் வரும் ஜூலை மாதம் 11,000 போ் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூலை மற்றும் 2027 பிப்ரவரி என இரு கட்டடங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், 200 வாா்டுகளிலும் வரும் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரையில் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடுகள் கணக்கெடுப்பில் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பிரத்யேக செயலியில் பொதுமக்கள் தங்களது வீட்டு விவரங்களைப் பதிவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, வீடு எத்தனை தளம் உடையது, குடிநீா், கழிவு நீா் இணைப்புகள் விவரம், குளிா்சாதன வசதியுள்ளதா போன்ற 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வீட்டு விவரங்களை பொதுமக்கள் பதிவு செய்த நிலையில், அதை சரிபாா்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் முழுவதும் ஈடுபடவுள்ளனா்.

மாநகராட்சியின் இளநிலை உதவியாளா் முதல் பள்ளி ஆசிரியா்கள் வரை இந்தப் பணியில் 11,000 போ் வரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து 2027 பிப்ரவரியில் மீண்டும் வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளோரது விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.