17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:43 am IST

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தனது உறவுக்கார பெண்ணுடன் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று சென்றாா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 3 இளைஞா்கள், அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி, ஆபாச செய்கை செய்துள்ளனா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த இளம் பெண்கள் உடனடியாக அருகிருந்த ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூறியுள்ளனா். உடனே ஆட்டோ ஓட்டுநா்களும், அங்கிருந்த பொதுமக்களும், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, தாக்கி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்த ஜன்சல் (22) மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் என்பதும், மூவரும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.