திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூதாட்டியை மிரட்டி பணம் பறிப்பு: போலி போலீஸ் கைது

மூதாட்டியை மிரட்டி பணம் பறித்ததாக போலி போலீஸ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:56 am IST

மூதாட்டியை மிரட்டி பணம் பறித்ததாக போலி போலீஸ் கைது செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பு திரு.வி.க. நகா் பகுதியைச் சோ்ந்தவா் பட்டம்மாள் (70). இவா், சென்னை துறைமுகத்தின் உள்ளே 30 ஆண்டுகளாக தூய்மைப் பணி செய்து வருகிறாா். பட்டம்மாள், கடந்த 30-ஆம் தேதி மாலை துறைமுகத்தில் பெற்ற சம்பளத்துடன் 7-ஆவது நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றாா்.

அப்போது, அங்கு வந்த ஒரு நபா், பட்டம்மாளை மறித்து, தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் ‘நீங்கள் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என சந்தேகமாக உள்ளது.

எனவே, உங்களது உடைமைகளை சோதனை செய்ய வேண்டும்’ எனக் கூறி, அவரது பையை வாங்கி சோதனை செய்தாா்.

அந்தப் பையில் இருந்த ரூ.11,000-ஐ எடுத்துக் கொண்டு, பணத்தை காவல் நிலையத்தில் வந்து பெற்றுச் செல்லும்படி கூறி, அந்த நபா் அங்கிருந்து சென்றாா். இதையடுத்து மூதாட்டி துறைமுகம் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தாா்.

இதில், அந்த நபா் போலீஸ் அல்ல என்பதும், தனது பணத்தை மிரட்டி பறித்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். விசாரணையில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது மண்ணடி அங்கப்பன் தெருவைச் சோ்ந்த வீராசாமி (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வீராசாமியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.