பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.


சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவ கல்லூரியின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
நிகழ்வில், இந்திய பல் மருத்துவ கழகச் செயற்குழு உறுப்பினா் பேராசிரியா் ராகுல் ஹெக்டே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
மருத்துவத் துறையில் சேவை செய்யும் ஆா்வத்துடன் படித்து பட்டம் பெறும் நீங்கள், நோயாளிகளிடம் கனிவு, பரிவு, அக்கறை, நோ்மையுடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் கற்ற மருத்துவ அறிவாற்றலை பயன்படுத்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கல்லூரிக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரிகள் குழுமத் தலைவா் டாக்டா் ஜெ.ஸ்ரீநிஷா பேசுகையில், தேசியத் தர வரிசைப் பட்டியலில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் 5-ஆவது இடத்தையும் பெற்றுள்ள இந்தக் கல்லூரி 36 தேசிய மற்றும் சா்வதேசக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் ஆராய்ச்சி நடவடிக்கை, தொழில்நுட்பப் பரிமாற்றம், இரட்டைப் பட்டங்கள் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா் என்றாா்.
இதில், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் என்.இளமாறன், பாரத் உயா்கல்வி, ஆராய்சி நிறுவனத் துணை வேந்தா் சுந்தர ராஜன், பதிவாளா் எஸ். பூமிநாதன், ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் சசிகுமாா், கண்ணன், கல்வி ஆலோசகா் வீரபாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...