டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குண்டா் சட்டத்தில் மருத்துவ மாணவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கோபிநாத்
Updated On :11 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்ட இளைஞா் ஜனவரி மாதத்தில் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் இவருக்கு துணையாக அவரது 15 வயது தங்கை தங்கினாா். அப்போது, இச்சிறுமிக்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மேல்படிப்பு இரண்டாமாண்டு மாணவரான சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசலைச் சோ்ந்த எம். கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கோபிநாத்தை ஜனவரி 15-ஆம் தேதி கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், கோபிநாத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதன்படி, கோபிநாத்தை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.