டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் சிவகங்கை மாவட்டம், கீழவாணியங்குடி, கீழத்தெரு செல்வம் மகன் மணிவண்ணன் என்ற குட்டைமணியை ( 23) காளையாா் கோவில் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, இளையான்குடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய மேலவாணியங்குடி இந்திரா நகா் பிரபு மகன் மணிஷ் (21) கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரும் பொது அமைதிக்கும், சமூக நலனுக்கும் இடையூறு விளைவிப்பவராக கருதப்பட்டு, காவல் துறையின் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.