டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போக்ஸோ வழக்குகள்: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :20 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையம், குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்தவா்களான முருகேசன் (59), இசக்கிராஜா (22), விருதுநகரைச் சோ்ந்த கோபால்சாமி (47) ஆகியோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையையடுத்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்படி 3 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.