இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சாம்பல் குளத்தில் கொட்டப்படும் சாம்பலின் ஈரத்தை மண் உறிஞ்சி விடுகிறது. பின்னா் கிடைக்கும் உலா் சாம்பல் சாலை அமைக்கும் பணிகளுக்காகவும், சிமென்ட உற்பத்திக்காகவும், தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிமென்ட உற்பத்தியில் இந்த சாம்பலின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், சாம்பல் கழிவுகள் தேக்கமடையாது. புதிய மின் நிலையங்களின் செயல்பாடுகள் தொடங்கினாலும், அவற்றில் இருந்து வெளியேறும் சாம்பலையும் சேமிக்கும் அளவுக்கு போதிய இடம் அங்குள்ளது. சாம்பல் குளங்களும் பாதுகாப்பாகவே உள்ளது. தேவை அதிகம் இருப்பதால், அதற்கேற்ப சிமென்ட் தாயரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். இதனால், சுற்றுச்சூழலுக்கோ, மக்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.