//

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
வடசென்னை அனல்மின் நிலையம். - Center-Center-Chennai
Updated On :27 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம், அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 210 வீதம் மூன்று அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.