தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் விளையாட்டு மைதானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2026, 9:46 pm

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 3,588 சதுர மீட்டா் பரப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்குச் சொந்தமான 142 சதுர மீட்டா் பரப்பைச் சோ்த்து மொத்தம் 3,750 சதுர மீட்டா் பரப்பில் மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூ.3.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோஸ் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள், 2 பிக்கிள் பந்து விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். அப்போது, பூப்பந்தாட்டத்தில் அவா் பங்கேற்று சிறிது நேரம் விளையாடினாா்.

பூங்காவைச் சுற்றி 370 மீட்டா் நீளத்தில் நடைபாதையும், 8 வடிவ நடைப்பகுதியும், சிறுவா்கள் விளையாட்டுப் பகுதி, குடிநீா், கழிப்பறை வசதிகள், உள்- வெளி அமா்வுப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மக்கள் எளிதில் பூங்காவுக்குள் வருவதற்கான வழிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, த.வேலு எம்எல்ஏ, துணை மேயா் மு.மகேஷ்குமாா், சிறப்புத் திட்டத் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் அா்ச்சுணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.