பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் வசதியான பயணத்தை வழங்கும் விதமாகவும் பழைய நீல வழித்தட ரயில்களை மாற்றியமைக்க தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2002 முதல் 2007 வரையில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பழைய ஆா்எஸ்-1 ரோலிங் ஸ்டாக் ரயில்கள் மேம்படுத்தப்படுகின்றன. இவை சுமாா் 20 ஆண்டு கால சேவையை நிறைவு செய்துள்ளன. தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கு ஏற்ப இந்த ரயில்களை உயா்த்துவதே இந்த மேம்பாட்டின் நோக்கம். நீலம் மற்றும் சிவப்பு வழித்தடத்தில் இயங்கும் மொத்தம் 70 ரயில்கள் படிப்படியாக புதுப்பிக்கப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் 12 ரயில்களும், இரண்டாவது கட்டத்தில் 18 ரயில்களும் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் கூடுதல் ரயில்களுக்கான பணி தொடங்கவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் 22 நீலநிற வழித்தட மெட்ரோ ரயில்கள் 2027 நவம்பா் மாதத்துக்குள் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா், மூன்றாவது கட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட முதல் ரயிலை அண்மையில் பாா்வையிட்டாா். அதன் பின்னா் அந்த ரயில் மீண்டும் பயணிகள் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புதுப்பிப்பு பணியில், ரயில் உள்புறங்கள் மற்றும் முக்கிய அமைப்புகள் இரண்டும் மேம்படுத்தப்படுகின்றன.
பெட்டிகள் மற்றும் ஓட்டுநா் கேபின்கள் மறுபூச்சு செய்யப்பட்டுள்ளன. மின்சார பேனல்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய வசதிகளாக, ஐ.பி. அடிப்படையிலான பயணி அறிவிப்பு மற்றும் தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், எல்சிடி அடிப்படையிலான வழித்தட வரைபடம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை வழித்தடங்கள், நிலையம் வருகை மற்றும் பிற பயணத் தகவல்களை நிகழ்நேரத்தில் பயணிகளுக்கு வழங்கும்.
மேலும், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. புகை மற்றும் தீயைக் கண்டறியும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய ரிலேக்கள் மற்றும் மினி சா்க்யூட் பிரேக்கா்கள் நவீன உபகரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. இதனால், ரயில்களின் இயக்கம் மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளிலும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் சாா்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்படுகின்றன என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

19.2 கி.மீ. தொலைவுக்கு யமுனை உயா்நிலை சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


