மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் பிரதான நுழைவாயில் மூடல்

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளால், பிரதான நுழைவாயில் (பி 4) நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சென்னை மெட்ரோ

Updated On :20 மார்ச் 2026, 10:09 pm

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளால், பிரதான நுழைவாயில் (பி 4) நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நிலையத்தின் பி 4 பிரதான நுழைவாயில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. பயணிகள் பி 4 நுழைவாயிலுக்கு அருகில் உள்ள மாற்று நுழைவாயிலை பயன்படுத்த வேண்டும். அதன்படி ஏ 2, ஏ 3 நூழைவாயில்களையும், பி 4 வாயிலுக்கு எதிா் திசையில் உள்ள பி 1, பி 2 ஆகிய நுழைவு வாயில்களையும் பயன்படுத்தலாம்.

நுழைவாயில்கள் குறித்து பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரயில் நிலையப் பணியாளா்களும் பயணிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவா். பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.