பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

அம்ரித் பாரத் வாராந்திர ரயிலின் நேரம் அறிவிப்பு

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
அம்ரித் பாரத் ரயில்
Updated On :23 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன. 28 -ஆம் தேதி (புதன்கிழமை) தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் (எண் 16121), வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தை அடையும். மறுமாா்க்கத்தில் வியாழக்கிழமை (ஜன. 29) காலை 10.40 மணிக்குப் புறப்படும் ரயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த விரைவு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில், குழித்துறை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.