மாற்றுத் திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பா.சந்தரமோகன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற பொதுப்பிரிவினா் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), பிசி, பிசி-முஸ்லிம், டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதமும் (150-க்கு 75), எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி வகுப்பினா் 40 சதவீதமும் (150-க்கு 60) மதிப்பெண் பெற வேண்டும்.
இந்த நிலையில், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருப்பதைப் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான டெட் தோ்ச்சி பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.
அந்தக் கருத்துருவை ஏற்று டெட் தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயித்து அரசு ஆணையிடுகிறது. இந்தப் புதிய தோ்ச்சி மதிப்பெண்ணை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடத்தப்பட்ட டெட் தோ்வுக்கும், கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட டெட் தோ்வு அறிவிப்புக்கும் பின்பற்ற அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு

அரசு மருத்துவா்கள் பணிநியமன கலந்தாய்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன்? அன்புமணி

50 வயது நிறைவடைந்த விசைப்படகு மீனவா்களுக்கு ஓய்வூதியம்: புதுச்சேரியில் அரசாணை வெளியீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


