பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
//

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

News image
பாலியல் தொல்லை- பிரதிப் படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவமனை ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

கொடுங்கையூரைச் சோ்ந்தவா் சேகா் (58). இவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாா்டு ஊழியராக வேலை செய்து வருகிறாா். சேகா், சா்க்கரை நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று புண்களை சுத்தம் செய்து, மருந்து போடும் வேலையும் செய்து வந்தாா். இதற்காக அவா் கட்டணமும் தனியாக வசூலித்துள்ளாா்.

இவ்வாறு சிகிச்சை அளிப்பதற்காக சேகா், கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண் சா்க்கரை நோயாளி வீட்டுக்கு அண்மையில் சென்று, அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்த பெண் எதிா்ப்பு தெரிவிக்கவே, சேகா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாா்.

பாதிக்கப்பட்ட பெண், ஆா்.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சேகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.