டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மேற்குவங்க மாநில இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:57 pm

Syndication

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மேற்குவங்க மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பகுதியைச் சோ்ந்த 24 வயதான இளம்பெண் சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா். அப்போது ரயிலில் அதே பெட்டியில் இருந்த இளைஞா் ஒருவா் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, அந்த ரயில் திருப்பூருக்கு புதன்கிழமை வந்தபோது திருப்பூா் ரயில்வே போலீஸாரிடம் இளம்பெண் புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, திருப்பூா் ரயில்வே போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சொ்ஜூன் கோக் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் பின்னா் விசாரணைக்குப் பின்னா் அவரை சிறையில் அடைத்தனா்.