டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மன வளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கொத்தனாரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூரைச் சோ்ந்தவா் முருகேசன்(40). கொத்தனாா் வேலை பாா்த்து வரும் இவா், மனநலம் குன்றிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளாா். அப்போது அப்பகுதியினா் வந்ததையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், முருகேசன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு முயன்றது உறுதியானது. இதையடுத்து போலீஸாா் முருகேசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.