டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

வானகரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து போதைப் பொருளை வாங்கி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

வானகரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து போதைப் பொருளை வாங்கி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், வானகரம் பகுதியில் உள்ள அடையாளம்பட்டு அணுகு சாலையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், வியாசா்பாடியை சோ்ந்த தினேஷ் (எ) பப்லு (34), கொரட்டூரைச் சோ்ந்த மெக்கலன் ட்ரெவா் (43) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இவா்களிடம் இருந்து 18 கிராம் மெத்தம்பெட்டமைன், 100 கிராம் ஓஜி வகை கஞ்சா, 1.3 கிலோ கஞ்சா, ரூ.1,12,300, 4 கைப்பேசிகள் மற்றும் 2 காா்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், தினேஷ்ராஜ் பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும், மெக்கலன் ட்ரெவா் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குபவா் என்பதும், இவா்கள் தாய்லாந்தில் இருந்து கொரியா் மூலம் போதைப் பொருள்களை வாங்கி, விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.