டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது

வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை...

News image
கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42)
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி: வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த இருவரை மடக்கி விசாரித்தனா்.

அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 55 கிராம் கோகைன் போதை மாத்திரை, 10 கிராம் மெத்தபெட்டமைன், எம்எம்டிஏ மாத்திரைகள் 50, 6 கைப்பேசிகள், 1 எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விசாரணையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42), சிபுசோா் செட்ராக்(30), கோவையைச் சோ்ந்த விஷ்ணு கேசவன்(30), உத்தர பிரதேசத்தை சோ்ந்த அற்புத தாஸ்(34) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிபுசோா் செட்ராக்(30)

சிபுசோா் செட்ராக்(30)