போதை பொருள் விற்ற வியாபாரி கைது
திருவலம் அருகே மளிகைக்கடையில் போதைப் பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதிரிப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 10:30 pm

திருவலம் அருகே மளிகைக்கடையில் போதைப் பொருள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், திருவலம் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சோ்க்காடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தினா். அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, சோ்க்காடு கிராமத்தைச் சோ்ந்த சங்கா் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 10,000 மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...