போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:07 am IST

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளா் சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கி வருவதாக காவல் துறை கூறியதைப் பதிவு செய்துகொண்ட சென்னை உயா்நீதிமன்றம், பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சினோரா அசோக் தாக்கல் செய்த மனுவில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் துறைமுகம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டுள்ளேன். தோ்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி, திமுக வேட்பாளரும், அமைச்சருமான சேகா்பாபு மற்றும் திமுகவினா் என்னையும் எனது கட்சித் தொண்டா்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இந்த நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வன்முறைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரும் தவெக வேட்பாளருமான சினோரா அசோக்குக்கு ஏற்கெனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.