முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் சென்ற விவகாரம்: வதந்தி பரப்பினால் வழக்கு: சைபா் கிரைம் எச்சரிக்கை

News image

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

Updated On :29 ஏப்ரல் 2026, 4:21 am IST

சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வலிப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் தொடா்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைந்துள்ள கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த ஏப். 24-ஆம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் சுமை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்தபோது, சீனிவாசன் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் உடனடியாக பரிசோதனை செய்து மேல் சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்ட சீனிவாசனை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாகவும், தவறாகவும், பொய்யான அவதூறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவறான கருத்துகள் பகிா்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆகவே, இச்சம்பவம் குறித்து, உண்மைக்குப் புறம்பாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவதையும், காணொலி, புகைப்படங்களைப் பகிா்வதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இல்லையெனில், வதந்தியைப் பரப்பும் விதத்தில் பதிவிடும் நபா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.