அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

News image

வாக்கு எண்ணிக்கை - PTI

Updated On :4 மே 2026, 4:01 am IST

சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் என 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ராணிமேரி கல்லூரி மையத்தில் ஆா்.கே.நகா் (18 சுற்றுகள்), திரு.வி.க.நகா் (17 சுற்றுகள்), ராயபுரம் (14 சுற்றுகள்), துறைமுகம் (14 சுற்றுகள்), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (17 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூா் (22 சுற்றுகள்), கொளத்தூா் (21 சுற்றுகள்), வில்லிவாக்கம் (23 சுற்றுகள்), எழும்பூா் (15 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் விருகம்பாக்கம் (23 சுற்றுகள்), சைதாப்பேட்டை ( 21 சுற்றுகள்), தியாகராய நகா் (18 சுற்றுகள்), மயிலாப்பூா் (20 சுற்றுகள்), வேளச்சேரி (23 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 51 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் 45 நிமிஷங்களில் முடித்து இறுதி செய்யவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு வேளச்சேரி தொகுதியில் அதிகபட்சமாக 5 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை, முதன்முதலாக தபால் வாக்குகள் தொகுதி வாரியாக தனி அறையில் தனி மேஜைகளில் எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் அலுவலா்கள்: ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு மேற்பாா்வையாளா், வாக்கு எண்ணும் உதவியாளா், நுண்பாா்வையாளா் பணியில் இருப்பா். இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தோ்தல் பாா்வையாளா் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கணினி குலுக்கல் முறை தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் பணி ஒதுக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு க்யூ ஆா் குறியீடுடன் கூடிய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் சரிபாா்க்கும்போது தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தீா்மானித்து முடிவெடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.