சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேலத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.44.83 லட்சம் ரொக்கம், 4 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் உடைமைகள் சோதனையிட்டனா். அப்போது சேலத்திலிருந்து ரயிலில் சென்ட்ரல் நிலையம் வந்திறங்கிய பயணி ஜெயராஜ் (43) என்பவரிடம் 289 கிராம் மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளும், பணமும் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும், ரூ.44.83 லட்சம் ரொக்கப் பணத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்ததாகவும், அதன்படி விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

