சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேலத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.44.83 லட்சம் ரொக்கம், 4 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் உடைமைகள் சோதனையிட்டனா். அப்போது சேலத்திலிருந்து ரயிலில் சென்ட்ரல் நிலையம் வந்திறங்கிய பயணி ஜெயராஜ் (43) என்பவரிடம் 289 கிராம் மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளும், பணமும் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும், ரூ.44.83 லட்சம் ரொக்கப் பணத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்ததாகவும், அதன்படி விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








