ஈரானில் போா்ப் பதற்றத்தில் சிக்கித் தவித்த 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனா்.
அவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் வரவேற்றனா்.
மேற்கு ஆசிய போா்ச் சூழல் காரணமாக அங்குள்ள நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்கள் தொடா்ந்து மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனா்.
அந்த வகையில், ஈரானிலிருந்து 312 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்களில் 222 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், குஜராத் (73), கேரளம் (9) மற்றும் மற்ற மாநிலங்களைச் சோ்ந்த 8 மீனவா்கள் அழைத்து வரப்பட்டனா்.
தமிழகத்தைச் சோ்ந்த 222 மீனவா்களில் 104 போ் கன்னியாகுமரி, 30 போ் தூத்துக்குடி, 35 போ் திருநெல்வேலி, 7 போ் நாகை, 4 போ் மயிலாடுதுறையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த மீனவா்களை மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ்கோயல், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் ஆகியோா் நேரில் சென்று வரவேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் சென்னை வந்தனா்

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


