மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

News image

பா.வளா்மதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:21 am

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சா்ச்சையானது. இதையடுத்து, பெண்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் கடந்தாண்டு ஏப். 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 600 போ் கலந்து கொண்டனா். அனுமதிக்கப்படாத இடத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பா.வளா்மதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், அரசியல் காரணத்துக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரா் வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.