இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 3 போ், விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 3 மீனவா்கள், கடந்த ஜன.13-ஆம் தேதி, விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். அவா்கள் நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் அவா்களைக் கைது செய்து விசைப்படகு, மீன்பிடிவலைகளை பறிமுதல் செய்தனா். பின்னா், மீனவா்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் குடும்பத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 தமிழக மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.
விடுதலையான அவா்கள் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் அவா்களை அதிகாரிகள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 312 மீனவா்கள் சென்னை வருகை!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


