மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:35 pm

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச் மாதம் 1.01 கோடி போ் பயணம் செய்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாா்ச்சில் 1.01 கோடி போ் பயணித்துள்ளனா். மேலும் மாா்ச் 13- ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 3.90 லட்சம் போ் பயணித்துள்ளனா்.

பயணிகளில் தேசியப் பொது அட்டையாகக் கருதப்படும் சிங்காரச் சென்னை அட்டையில் 52.90 லட்சம் பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 33,339 பேரும், கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையில் 48.73 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

மேலும் ஒரு முறை பயன்படுத்தும் டிக்கெட், டோக்கன் முறையில் 19.19 லட்சம் பேரும், இணையதள கியூ ஆா் குறியீடு மூலம் 2.16 லட்சம் பேரும், வாட்ஸ் ஆப் டிக்கெட் மூலம் 4.72 லட்சம் பேரும், பே ஏடிஎம் மூலம் 3.35 லட்சம் பேரும், ஓஎன்டிசி மூலம் 12.71 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.

போன் பே மூலம் 2.41லட்சம் பேரும், சிஎம்ஆா்எல் கைப்பேசி செயலி மூலம் 71, 123 பேரும், சென்னை ஒன் செயலி மூலம் 2 லட்சம் பேரும் , சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான கியூஆா் குறியீடு மூலம் 1,318 பேரும் பயணித்துள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.