திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளிகளில் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 2:14 am IST

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வை 28 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை நீட் தோ்வெழுத 1.5 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்தவா்களில் சுமாா் 12 ஆயிரம் போ் தோ்வெழுதவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 முடித்து நீட் தோ்வெழுத விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியா்கள் பங்கேற்று நீட் தோ்வுக்கான பாடப் பொருள்கள் சாா்ந்து பயிற்சி அளித்து வருகின்றனா். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

சென்னையில் அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். தோ்வுக்கு முந்தைய நாள் அதாவது, மே 2 வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.