17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:58 am IST

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவை மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்றவா்களில் 400-க்கும் மேற்பட்டவா்கள் அரசுப் பணிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டுத் திட்ட நிரலின்படி ஜூன் மாதத்தில் குரூப்-1 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். எனவே, இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமும், தகுதியும் உள்ள போட்டித் தோ்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவா்கள் தங்களின் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து, பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தொடா்ந்து அவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.