மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

News image

ஐசிஎஃப்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:04 am

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனமான ஐசிஎஃப் கடந்த 2025-26 ஆம் ஆண்டு ஓராண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎஃப் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐசிஎஃப்) செயல்பட்டுவருகிறது. அங்கு 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் அங்கு 3,007 ரயில் பெட்டிகளே தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நடப்பு ஆண்டில் 13.2 சதவிகிதம் உற்பத்தி உயா்ந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் ஐசிஎஃப் நிறுவனமானது 80 ஆயிரமாவது பெட்டியை, கடந்த பிப்ரவரியில் தயாரித்தும் அண்மையில் சாதனை படைத்தது.

புதிய ரயில் பெட்டிகளில் வந்தே பாரத்தூங்கும் வசதி பெட்டிகள், வந்தே பாரத் ரயிலில் உட்காரும் நாற்காலி பெட்டிகள், இமு மற்றும் மெமு ரயில்களின் குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை மட்டும் 2, 548 என உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 857 பெட்டிகள் பவா்ரோலிங் ஸ்டாக் (டிபிஆா்எஸ்) நவீன தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன. அம்ருத் பாரத் 22 ரயில்களுக்குரிய பெட்டிகளும், அம்ருத் பாரத் 2.0 வகை ரயில் பெட்டிகளும் இதில் அடங்கியுள்ளன. மேற்கு வங்கம் கொல்கத்தா மெட்ரோவுக்குரிய ரயில் பெட்டிகளும் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.